என் சரித்திரம் - பக்கம் - 741
செய்யுட் கடிதம்
அவர் இராமநாதபுரம் சென்றவுடன் எனக்கு ஒரு செய்யுட் கடிதமும் ஐந்நூறு ரூபாய்க்கு ஓர் உண்டியலும் 17-12-1894 அன்று எனக்கு அனுப்பினார். அக்கடிதத்திற் சில பகுதிகள் வருமாறு.
(கலி வெண்பா)
1. “திங்கள் புரையுந் திருவதனச் செல்வியொரு பங்கினமர் பெம்மான் பதமலரே - துங்க
2. முடிக்கணியாத் தாங்கி முதுபரவை வேலிப் படிக்கணியா யென்றும் பலநூல் - வடிக்கும்
3. உளத்தார்க் கொருநிதியா யோங்குபுகழ் மேய வளத்தா லுயர்குடந்தை மன்னித் - துளக்கரிய
4. நேமிநா தன்மருகி நேயமனையா ளோடுவாழ் சாமிநா தைய தகுநண்ப - மாமுகவை
5. மன்னியபாண்டித்துரைபல் வந்தனஞ்செய் தின்றெழுதும் நன்னிருப மீதாம்..............
6. காமாரி தந்தவிளங் காதலனே ராய்த்தமிழின் மாமாரி பெய்துலகை வாழ்விப்போய் - .............. ஃ ஃ ஃ
7. பயன்சிறிய தேனும் பனையளவாக் கொள்வர் நயன்றெரிவோ ரென்றவுண்மை நாடி - முயன்றிதுபோ